UPDATED : ஆக 17, 2026 09:47 PM
ADDED : ஆக 17, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:திண்டிவனத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோ திருட்டுபோனது.காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு சீனுவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி, 36; இவர், திண்டிவனத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
வழக்கம் போல், கடந்த 11ம் தேதி ஆட்டோ ஓட்டிவிட்டு, திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு, ஊருக்கு சென்றிருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோ திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, பூபதி கொடுத்த புகாரின் பேரில், ரோஷனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
