sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நுண்ணீர் பாசனத்தில் தானியங்கி தோட்டக்கலை அதிகாரி தகவல்

/

நுண்ணீர் பாசனத்தில் தானியங்கி தோட்டக்கலை அதிகாரி தகவல்

நுண்ணீர் பாசனத்தில் தானியங்கி தோட்டக்கலை அதிகாரி தகவல்

நுண்ணீர் பாசனத்தில் தானியங்கி தோட்டக்கலை அதிகாரி தகவல்


ADDED : ஜூன் 30, 2025 03:11 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தில் தானியங்கி அமைத்து பயன் பெறலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

நுண்ணீர் பாசனத்தில் தானியங்கியின் பயன்கள் இன்றியமையாத புதிய வளர்ச்சியாகும். தென்னை, மா, எண்ணெய் பனை, சப்போட்டோ ஆகிய தோட்டப் பயிர்களை அதிக பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தானியங்கியை பயன்படுத்தி அதிக பரப்பிலான நுண்ணீர் பாசனத்தை சுலபமாக கையாள முடியும்.

இந்த முறையில் பயிர்களுக்கு பாசனம் அளித்தல், உரமளித்தல் போன்ற செயல்கள் சிரமமின்றி செய்து முடிக்க முடிகிறது.

அரசு மானியத்தில் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிறு, குறு மட்டுமே தானியங்கி அமைப்பை அரசு மானியத்தில் பெற முடியும். பயனாளி தானே சொந்த செலவில் தானியங்கி அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும். பின், அரசு அலுவலர்கள் மூலம் கூட்டாய்வு செய்து பயனாளிக்கு பின்னேற்பு மானியமாக ஆதார் இணைத்த வங்கி கணக்கிற்கு அரசு மானியம் விடுவிக்கப்படும்.

ஒரு எக்டர் பரப்பிற்கு தானியங்கி அமைக்க 40 ஆயிரம் ரூபாய் நிதி வரம்பிடப்படுகிறது. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீதம் மானியம் அடிப்படையில் ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக 22 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.

இதர விவசாயிகளுக்கு 45 சதவீதம் மானியம் அடிப்படையில் ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக 18 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us