/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் திண்டிவனத்தில் இன்று விழிப்புணர்வு முகாம்
/
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் திண்டிவனத்தில் இன்று விழிப்புணர்வு முகாம்
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் திண்டிவனத்தில் இன்று விழிப்புணர்வு முகாம்
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் திண்டிவனத்தில் இன்று விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 28, 2025 11:50 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் இன்று முதல் 3 நாட்கள் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் காமராஜ் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய மக்கள் தொடர்பக இயக்குநரகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திண்டிவனம் சந்தைமேடு எஸ்.பி.ஜி., திருமண மண்டபத்தில் இன்று 29ம் தேதி துவங்கி 30, 31 ஆகிய 3 நாட்கள் போஷன் அபியான், துாய்மை பாரத இயக்கம், சர்வதேச பெண் குழந்தைகள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மாநில அரசு ஒருங்கிணைப்போடு முகாம் நடக்கிறது.
இதில், ஆதார் திருத்த மையம், வேளாண் அரங்கம், மாவட்ட முன்னோடி வங்கியின் கல்விக்கடன், தொழில் கடன் அரங்கம் உள்ளிட்ட ஏராளமான அரங்ககள் அமைக்கப்படுகிறது. திண்டிவனம் மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி, வேல்முருகன், ஜெய்கணேஷ் உடனிருந்தனர்.

