ADDED : பிப் 06, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மாலதி, ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்ஙேகற்றனர்.

