ADDED : ஜன 10, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கண்டம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார்.
துணை தலைவர் சபரிநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத இயக்கம் ஊக்குநர் சுந்தரி, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், துப்புரவு பணியாளர்கள் கம்சலா, முனியம்மாள், புஷ்பராணி மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாகவும், சுகாதார மான நிலையை ஏற்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

