ADDED : மார் 16, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் இறகு பந்து போட்டி துவக்க விழா நடந்தது.
திண்டிவனம் சக்கரபாணி நகரிலுள்ள ஸ்போர்ட் கிளப்பில் நேற்று காலை நடந்த போட்டி துவக்க விழாவிற்கு நகர தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். இதில் நகர தி.மு.க., அவைத்தலைவர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகர், ஸ்டீபன்ராஜ், சஞ்சய்சசி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.