/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய டவுன் ஹாலில் அடிப்படை வசதிகள்...மிஸ்சிங்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
புதிய டவுன் ஹாலில் அடிப்படை வசதிகள்...மிஸ்சிங்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதிய டவுன் ஹாலில் அடிப்படை வசதிகள்...மிஸ்சிங்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதிய டவுன் ஹாலில் அடிப்படை வசதிகள்...மிஸ்சிங்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜன 17, 2026 06:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் புதிய டவுன் ஹால் பணியை முழுமையாக முடிப்பதற்கு, அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். விழுப்புரம் நகராட்சி 1919ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மூன்றாம் நிலை பேரூராட்சியாக துவங்கப்பட்டது. 1988ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நுாறாண்டு நிறைவு பெற்றுள்ளது.
நகரின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக கடந்த ஆட்சியில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதி உள்ள இடத்தில் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆட்சியில் துவங்கி நிறைவு பெற்று புதிய கட்டடத்திற்கு நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்தாண்டு ஜனவரி மாதம் விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 திட்டங்கள் அறிவித்தார்.
அதில், விழுப்புரம் நகராட்சி அலுவலக பழைய கட்டடம் இருந்த இடத்தில், 2 கோடி ரூபாய் செலவில் புதிய டவுன் ஹால் அமைக்கப்படுமென அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், புதிய டவுன் ஹால் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கியது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கிய பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டவுன் ஹால் முழுமையான வசதிகளுடன் அமைப்பதற்கு, போதிய அளவிலான நிதி ஒதுக்கப்படவில்லை.
எனவே, கூடுதலாக 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நகராட்சி சார்பில், கலெக்டரிடம் வலியுறுத்தப்பட் டுள்ளது.
இதற்கு அரசு தரப்பில், உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு பணியை ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் அமைக்கப்படும் புதிய டவுன் ஹால், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

