/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுவற்றில் பைக் மோதி வாலிபர் பலி
/
சுவற்றில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : மார் 21, 2024 12:14 AM
வானுார் : வானுார் அருகே தறிகெட்டு ஓடிய பைக், மதில் சுவற்றில் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி கே.கே. நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் நடராஜ், 30; இவர் நேற்று மாலை 5;30 மணிக்கு, வானுார் அடுத்த ரங்கநாதபுரத்தில் இருந்து கீழ்கூத்தப்பாக்கம் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சேமங்கலம் கிராமத்தை கடக்கும் போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் சாலையோரத்தில் இருந்த தனியார் கம்பெனி சுவற்றின் மீது மோதியது.அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த வானுார் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வானுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

