/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் திருடிய நபர் கைது 18 வாகனங்கள் பறிமுதல்
/
பைக் திருடிய நபர் கைது 18 வாகனங்கள் பறிமுதல்
ADDED : நவ 01, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி:செஞ்சி போலீசார் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து, 18 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேல்களவாய் கூட்ரோட்டில் செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப் இன்ஸ்பெக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் சென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஷாஜகான், 55; என்பதும், இவர், செஞ்சி, வளத்தி, அனந்தபுரம், வந்தவாசி பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்மீது வழக்குப் பதிந்து 18 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.