/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெ.,பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
ஜெ.,பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 25, 2026 05:04 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 78வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 5000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் ரூபன்ராஜ் தலைமை தாங்கினார். மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு உணவு பரிமாறினார்.
விழாவில், அர்ஜூனன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், ஜெ., பேரவை இணைச் செயலாளர்கள் வடபழனி, விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், எம்.ஜி.ஆர்.மன்றம் ஏழுமலை, ரவி, வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, திருமுருகன், கார்த்திக், கருணாகரன்.
மகளிர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தனன், முன்னாள் கவுன்சிலர்கள் வேல்முருகன், சக்திவேல், ஜாகீர்உசேன் நிர்வாகிகள் தினகரன், ஜெயவேல், சீனு, கார்த்திக், கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தில் ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் சார்பில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் பூபாலன் தலைமை தாங்கினார். ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொது மக்களுக்கு இனிப்பு வுழங்கினார்.
ஒன்றிய நிர்வாகிகள் ராஜாராமன், செந்தில்குமார், முருகானந்தம், பாண்டுரங்கன், குமரன், சீனு, சுதாகர், சீனுவாசன், பெருமாள், பாபு, விஷ்வா, பன்னீர், முருகன், செல்வகுமார், கோவிந்தசாமி, ஆனந்தகுமார், கோபி, சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம் பாங்கொளத்துாரில் ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க., இலக்கிய அணி செயலாளர் குட்டி (எ) யோகநாதன் தலைமையில், ஜெ., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய மேலவை பிரதிநிதி பவாகர்ணன், கிளைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கிளை பிரதிநிதி முருகன், துணைச் செயலாளர் பூபாலன், பாசறை ராஜ்குமார், நிர்வாகிகள் நட்ராஜ், முருகன், மகேஷ், மணிபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

