
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் மயிலம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கி னார்.
கல்லுாரி செயலாளர் ராஜூவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பாலகுமாரன் வரவேற்றார். முகாமை கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முகாமில் 50 பேர் ரத்ததானம் வழங்கினர்.
அரசு மருத்துவர்கள் பாரதி, தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் மோகன கிருஷ்ணன், கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்ரமணியன், சுபஸ்ரீ மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

