/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றில் மூழ்கிய விவசாயி உடல் மீட்பு
/
ஆற்றில் மூழ்கிய விவசாயி உடல் மீட்பு
ADDED : டிச 10, 2024 07:07 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35; விவசாயி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி யளவில் தனது மகன் சுதேஷுடன், 14; தனது நிலத்திற்கு சென்று வீடு திரும்பும் போது சங்கராபரணி ஆற்றை கடந்தனர்.
அப்போது ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். உடன், அங்கிருந்தவர்கள் சுதேைஷ மீட்டனர்.
இந்நிலையில், ஆற்றில் ஸ்ரீகாந்த் உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார்
விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்தவர் ராமர் மகன் சின்னசாமி, 28; இவர் நேற்று முன்தினம்மாலை 4:00 மணியளவில்ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் நண்பர் களுடன் குளித்தபோது, நீரில் மூழ்கினார். திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்தினர்.
சம்பவ இடத்திற்குச் சென்று, இரவு வரை தேடி கிடைக்கவில்லை. நேற்று காலை சின்னசாமி உடல் மீட்கப்பட்டது.
திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.