sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அணைக்கட்டு அருகே நீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர் உடல் மீட்பு

/

அணைக்கட்டு அருகே நீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர் உடல் மீட்பு

அணைக்கட்டு அருகே நீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர் உடல் மீட்பு

அணைக்கட்டு அருகே நீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர் உடல் மீட்பு


ADDED : ஜன 17, 2025 06:42 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்: எல்லிஸ் அணைக்கட்டில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

விழுப்புரம் அடுத்த கப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் குரு பிரசாத், 15; கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் குருபிரசாத், நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரவு 7 :40 மணி வரை தேடி வந்த நிலையில் குருபிரசாத் உடல் கிடைக்கவில்லை.

மீண்டும் நேற்று காலை தேடும் பணியை துவக்கினர். இந்த நிலையில் எல்லிஸ் அணைக்கட்டு தென்பெண்ணையாற்றோரம் குரு பிரசாத்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

தகவல் அறிந்த திரு வெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us