sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தலைதுாக்குகிறது மீண்டும் சாராய விற்பனை

/

தலைதுாக்குகிறது மீண்டும் சாராய விற்பனை

தலைதுாக்குகிறது மீண்டும் சாராய விற்பனை

தலைதுாக்குகிறது மீண்டும் சாராய விற்பனை


ADDED : செப் 23, 2024 11:56 PM

Google News

ADDED : செப் 23, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவில் போதுமான போலீசார் இல்லாததால் சாராய விற்பனை மீண்டும் தலைதுாக்க துவங்கியுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன், மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., தீபக்சிவாச் பிறப்பித்திருந்தார்.

இந்த பணியிட மாறுதலில், முறையாக போலீசார் மாற்றப்படாமல் போலீசார் பலர் அதே போலீஸ் ஸ்டேஷன்களில் பணி புரிந்து வருகின்றனர்.

சிலர், எஸ்.பி., போட்ட உத்தரவை மதிக்காமல் மாறுதலான போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லாமல் அதே போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிகின்றனர். இது மட்டுமின்றி, மதுவிலக்கு பிரிவில் மட்டும், 66 போலீசார் வேறு சரகத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஆனால், மதுவிலக்கு பிரிவில் போதுமான போலீசார் நியமிக்கப்படாததால் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், போதுமான அளவில் ரோந்து பணியில் ஈடுபட போலீசார் இல்லாததால், விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் சாராய விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

உதாரணமாக, செஞ்சி, கோட்டக்குப்பத்தில் மதுவிலக்கு பிரிவில் இன்ஸ்பெக்டர் இல்லாததால், விழுப்புரம் இன்ஸ்பெக்டர் கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார். இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, முற்றிலுமாக சாராய விற்பனையை ஒழிக்க முடியாத நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us