/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
/
எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
ADDED : மார் 14, 2026 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணி வகுப்பு நடந்தது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், பாதுகாப்பாக ஜனநாய கடமையை ஆற்றும் பொருட்டு, திண்டிவனத்தில் நேற்று காலை போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.
திண்டிவனம் டவுன் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பிற்கு டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமை தாங்கினார். துப்பாக்கி ஏந்தி எல்லை பாகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, காந்தி சிலையில் முடித்தனர்.

