sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடு மேய்க்க கொத்தடிமையாக வைத்திருந்த சிறுவன் மீட்பு

/

ஆடு மேய்க்க கொத்தடிமையாக வைத்திருந்த சிறுவன் மீட்பு

ஆடு மேய்க்க கொத்தடிமையாக வைத்திருந்த சிறுவன் மீட்பு

ஆடு மேய்க்க கொத்தடிமையாக வைத்திருந்த சிறுவன் மீட்பு


ADDED : அக் 08, 2025 06:57 AM

Google News

ADDED : அக் 08, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; ஆடு மேய்க்க கொத்தடிமையாக இருந்த சிறுவனை, அதிகாரிகள் குழுவினர் மீட்டனர்.

விழுப்புரம் அருகே உள்ள கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 50; வீட்டில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுவனை, கடந்த 4 ஆண்டுகளாக, அவரது வீட்டில் கொத்தடிமையாக வைத்திருந்து, ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தி வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள், நேற்று காலை கோனுார் கிராமத்திற்கு சென்று, சிறுவனை மீட்டனர்.

விசாரணைக்கு பின் சிறுவனை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகாரளித்தனர். காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us