ADDED : ஆக 27, 2025 11:07 PM

கோட்டக்குப்பம் : சின்ன கோட்டக்குப்பம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை ரவிக்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்.
தமிழக அரசால், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு நகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இதையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சி, சின்னக்கோட்டகுப்பத்தில் உள்ள வேதா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.
இதில் ரவிக்குமார் எம்.பி, நகர்மன்ற சேர்மன் ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் உணவு பரிமாறி ஊட்டி விட்டனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை சேர்மன் ஜீனத் பீவி முபாரக், நகராட்சி பொறியாளர் ரவிக்குமார், பணி மேற்பார்வையாளர் ஆரோக்யா, காலை உணவு திட்ட பொறுப்பாளர் தின்னாயிர மூர்த்தி, வேதா அரசு உதவிப்பெறும் பள்ளி நிர்வாகி சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.