sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

/

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : அக் 11, 2025 07:29 AM

Google News

ADDED : அக் 11, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

அதில், 2025-26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கால அவகாசம் வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (scholarships.gov.in) பதிவு செய்து, 2025-26ம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us