
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் கஞ்சா விற்பனை செய்வரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கிடங்கல்(2) பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த முரளி(எ)தவக்களைமுரளி,42; என்பவரை சந்கேத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.
இதில் அவரிடம் விற்பனைக்காக 80கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பேரில் டவுன் போலீசார் அவர் மீது வழக்கு பதிவுசெய்து, அவரை கைது செய்து , கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.