sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

/

பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

பைக் மீது கார் மோதி ஒருவர் பலி


ADDED : அக் 13, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதியதில் மினி சரக்கு வேன் டிரைவர் இறந்தார்.

விக்கிரவாண்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் முருகையன், 48; மினி சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று இரவு 8:20 மணியளவில் விக்கிரவாண்டி செல்ல தெற்கு பைபாஸ் முனையில் தனது பைக்கில் சாலையைக் கடந்தார்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஹூண்டாய் கிரீட்டா கார் பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் முருகை யன் 30 அடி துாரம் துாக்கி எறியப்பட்டு அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டி வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த ராஜாமணி, 35; மற்றும் அவருடன் வந்த சிவக்குமார், 25; ஆகியோர் காயமின்றி தப்பினார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us