/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது இடம் குறித்த தகராறு 2 பேர் மீது வழக்கு
/
பொது இடம் குறித்த தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 30, 2024 07:48 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே பொது இடத்தை அனுபவிப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி அம்பிகா, 47; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் குபேந்திரன், 40; இவர்களது வீட்டுக்கு அருகே அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தை அம்பிகா குடும்பத்தினர் அனுபவித்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் குபேந்திரன் குடும்பத்தினர், அந்த பொது இடத்தில் இரும்பு ஷெட் அமைக்க முயன்றனர். இதனை, அம்பிகா தட்டி கேட்டதால், குபேந்திரன் குடும்பத்தினர் அவரை தாக்கினர்.
புகாரின் பேரில், குபேந்திரன், 40; வில்சன், 25; ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.