/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு
/
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்- மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு - இரும்பை ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பையுடன் நடந்து வந்த 2 பேரிடம் சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் 46 பீர் மற்றும் குவாட்டர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், காரைக்கால் கோவில் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் பிவிரில் ஜோ, 26; கேரளா மாநிலம் பாலக்காடு அஜய், 30; என்பது தெரிய வந்தது.
உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.