/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாயைத் தாக்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
/
தாயைத் தாக்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
ADDED : மார் 19, 2024 10:47 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே தாயைத் தாக்கிய மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அடுத்த புருஷானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. சகோதரர்கள். இவர்களுக்கு, அதே கிராமத்தில் பூர்வீக நிலம் 2 ஏக்கர் 23 சென்ட் உள்ளது.
இதில் வேலு, தனக்கு உரிய நிலத்தை கிரயம் செய்து தருவதாக சுந்தரிபாளையத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 9 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை விற்க, குமார் தரப்பினர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகாலிங்கம், சடையன், சுந்தரி, அய்யப்பன் ஆகியோர், நிலத்திலிருந்த குமாரின் தாய் ராஜவர்தினியை, 65; திட்டி, தாக்கினர்.
புகாரின் பேரில், குமார், மகாலிங்கம் உட்பட 5 பேர் மீதும் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

