/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பு தகராறு 12 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு தகராறு 12 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 30, 2025 12:45 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இடம் பிரச்னையில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே தளவானுார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு மனைவி மகாலட்சுமி, 42; இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் குணபூஷனம், 60; என்பவரும் உறவினர்கள்.
இந்த இரு தரப்பினரும் சேர்ந்து அதே கிராமத்தில் உள்ள 4 சென்ட் புறம்போக்கு இடத்தில் மாரியம்மன் கோவில் கட்ட ஏற்பாடு செய்தனர். கோவில் கட்டும் இடத்தில், மகாலட்சுமி தரப்பினர் நுாறு சதுரடி இடம் கூடுதலாக சேர்ந்து வருவதால் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், கடந்த 27 ம் தேதி ஏற்பட்ட பிரச்னையில் மகாலட்சுமி மற்றும் குணபூஷனம் இரு தரப்பை சேர்ந்தவர்கள் திட்டி, தாக்கி கொண்டனர்.
இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், குணபூஷணம், நாராயணன் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.