sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நில தகராறில் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

/

நில தகராறில் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

நில தகராறில் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

நில தகராறில் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 04:43 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நில பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், உறவினர்களை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் தாலுகா நங்காத்துார் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மனைவி ராயம்மாள்,60; குச்சிப்பாளையத்தில் உள்ள இவரது குடும்ப நிலத்தை, அவரது மூத்த சகோதரர் அகஸ்டியன்,78; குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி, அந்த நிலத்தில் தனக்கான பங்கை தர வேண்டுமென ராயம்மாளும், அவரது இரண்டாவது சகோதரர் ஜோசப்,62; ஆகியோரும் சென்று அகஸ்டியனிடம் கேட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அகஸ்டியன் மற்றம் அவரது மகன்கள் ஜூலியஸ்,43; கிறிஸ்துராஜ்,33; ஆகியோர் சேர்ந்து, ராயம்மாள், ஜோசப் ஆகியோரை தாக்கினர். படுகாயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், தாக்குதல் நடத்திய 3 பேர் மீதும், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us