/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 21, 2025 04:57 AM
விழுப்புரம் விழுப்புரம் அருகே குடும்ப பிரச்னையில் தாய், மகனைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சந்தியா. இருவரும் காதலித்து கடந்த மே மாதம் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று முன்தினம் கணவர் வீட்டிலிருந்த சந்தியாவை அவரது தந்தை பாலு, தாய் சரோஜா, சகோதரர் சரவணன் ஆகியோர் திட்டினர்.
இதையறிந்த ராஜசேகரின் உறவினர்கள் குருசாமி, விஜி, மாயக்கண்ணன், பூங்கோதை ஆகியோர் சரோஜா, சரவணன், உறவினர் காசிநாதன் ஆகியோரை திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், குருசாமி உட்பட 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.