/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : டிச 11, 2024 04:40 AM
விழுப்புரம், :  விழுப்புரத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
விழுப்புரம், வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பொற்கொடி, 26; இவரது கொழுந்தனார் புருஷோத்தமன், இவர், அதே பகுதியில் உள்ள திருமலை மனைவி அமலமேலு, 48; என்பவரின் வீட்டு வாசல் வழியாக சென்றார். அப்போது, அலமேலுக்கும், புருேஷாத்தமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அலமேலு, அவரது மகன் நரேந்திரன், உறவினர்கள் லட்சுமி, பொன்மணி ஆகியோர் பொற்கொடியின் வீட்டிற்கு சென்று, புருஷோத்தமன் எங்கே என கேட்டு பொற்கொடியை தாக்கினர்.
பொற்கொடி அளித்த புகாரின் பேரில், அலமேலு உட்பட 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

