/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு
/
கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 22, 2025 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : வளத்தி அருகே குப்பை கொட்டிய தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளத்தி அடுத்த பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 41; இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு குப்பையைக் கொட்டினார்.
இதனை அவரது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த கவிதா, 34; ரங்கநாதன், 37; ஆகியோர் எங்கள் இடத்தில் ஏன் குப்பை கொட்டுகிறாய் என கேட்டதால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பு புகாரின் பேரில், கவிதா, ரங்கநாதன், பூங்காவனம், சங்கர் ஆகிய 4 பேர் மீதும் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.