/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : டிச 27, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்,40; கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி,35; இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சந்திரசேகர், குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால், தனலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே சந்திரசேகர் நேற்று முன்தினம் மனைவியை அழைப்பதற்காக வந்துள்ளார். அவர், வராததால் ஆத்திரமடைந்து, அவரை திட்டி கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

