/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு
/
கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஏப் 12, 2025 05:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடனை கேட்டு திட்டி, தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருவெண்ணயெநல்லுார் அடுத்த தொட்டிக்குடிசை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ரமேஷ், 32; செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர், புதுச்சேரி பரிக்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசி,45; என்பவரிடம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதில், 44 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் கொடுத்துள்ளார். மீதி 6000 ரூபாய்க்கு பதில் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டு துளசி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து ரமேைஷ திட்டி, தாக்கியுள்ளனர். புகாரின் பேரில், துளசி மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.