/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாமியாருக்கு கத்தி வெட்டு மருமகன் மீது வழக்கு
/
மாமியாருக்கு கத்தி வெட்டு மருமகன் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2025 11:42 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் நத்தமேடு காலனியைச் சேர்ந்தவர் பாலகுரு, 25; இவர், நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றவர் வீட்டிற்கு வந்தபோது அவரது 6 வயது மகள் அனுஷா, மாமியார் கீதாவுடன், 40; இருந்ததைப் பார்த்ததும் ஆத்திரமடைந்து மகள் அனுஷாவை அடித்துள்ளார்.
இதனை கண்டித்த மாமியார் கீதா மற்றும் மாமனார் அருள்தாசையும் தாக்கியவர் கத்தியால் கீதாவின் கையை வெட்டியுள்ளார்.
காயமடைந்த கீதா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.