ADDED : செப் 28, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்,: குடிபோதையில் தாய், சகோதரனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
வானுார் அடுத்த ஆகாசம்பட்டு சீனுவாசன் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொம்மி, 52; இவர்களது மூத்த மகன் வீரப்பன், 30; இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தாய் பொம்மியிடம் புதிய வீடு கட்டுவது தொடர்பாக கேட்டு தகராறு செய்து, தாக்கியுள்ளார். தட்டிக்கேட்ட அவரது தம்பி விக்னேஷ், 28; என்பவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தார்.
படுகாயமடைந்த இருவரும், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில் வானுார் போலீசார் வீரப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.