sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

த.வெ.க., பெண் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்கு

/

த.வெ.க., பெண் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்கு

த.வெ.க., பெண் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்கு

த.வெ.க., பெண் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 31, 2025 12:14 AM

Google News

ADDED : ஆக 31, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தகராறு செய்து, மகளிரணி தலைவியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்த செந்தில்ராஜா மனைவி அஞ்சுகம், 42; த.வெ.க., நகர துணை செயலர், சாலாமேடு என்.எஸ்.கே., நகரை சேர்ந்த ரங்கன் மனைவி பிரேமா, 39; த.வெ.க., மாவட்ட மகளிரணி தலைவர். இவர்கள், தனது கட்சியினருடன், கடந்த 28ம் தேதி இரவு சாலாமேடு பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த இப்ராகிம்சுகர்ணா என்பவரது துாண்டுதலின் பேரில், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான முபாரக்,35; சுனில்,34; ஆகியோர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, முன் விரோதம் காரணமாக தகராறு செய்தனர்.

இதனால், அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அதனை தட்டிக்கேட்ட பிரேமாவை, இருவரும் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளனர்.

இது குறித்து, அஞ்சுகம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் இப்ராகிம்சுகர்ணா, முபாரக், சுனில் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us