/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு
/
ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 30, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 27; பரத் (எ) ராஜமாணிக்கம், 36; நேற்று முன்தினம் இவர்கள், விழுப்புரம் சிக்னல் பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர்.
அப்போது, யுவராஜ் தனது மொபைலை காணவில்லை என ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். விழுப்புரம் மேற்கு போலீசார், யுவராஜ், பரத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.