/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு
/
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 10, 2025 06:35 AM
செஞ்சி, : ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த நெகனுார் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்,74; ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பாலமுருகன், 38; என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலப் பிரச்சனை உள்ளது. கடந்த 31ஆம் தேதி பாலமுருகன் குடும்பத்தினர் குப்பன் நிலத்தின் வழியாக நடந்து சென்றனர்.
ஏன் எனது நிலத்தின் வழியாக நடந்து செல்கின்றீர்கள் என கேட்ட குப்பனை, பாலமுருகன் அவரது மனைவி ஆனந்தாயி, 33; உறவினர் வாசுதேவன், 58; சேர்ந்து தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த குப்பன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் பாலமுருகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.