/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியவரை தாக்கிய இருவர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : மே 07, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை,: மேல்மலையனுார் அடுத்த களர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி, 63. இவருக்கு சங்கிலிகுப்பம் ஏரிக்கரையில் விவசாய நிலம் உள்ளது.
கடந்த 2ம் தேதி கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அதே கிராமத்தைச் சேர்ந்த குடுபாஷா, 35, பர்கத் ,30 ஆகியோர் முன்விரோதம் காரணமாக மணியிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டி, தாக்கினர்.
மணி அளித்த புகாரின்பேரில், குடுபாஷா, பர்கத் மீது மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.