/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு
/
சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 16, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
ஆரோவில் அடுத்த பூத்துறை கருமகாரிய கொட்டகையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் சென்று, அங்கு சூதாடிய, பூத்துறை மகேந்திரன், 32; சிவராஜ், 31; ஹரிஹரன், 27; ஜெயச்சந்திரன், 27; செந்தில், 35; ஆகியே 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

