/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் தகராறு 7 பேர் மீது வழக்கு பதிவு
/
இரு தரப்பினர் தகராறு 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 15, 2024 06:40 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே இரு தரப்பினர் தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வளவனுார் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன்,64. இவரது உறவினர் அதே கிராமத்தை சேர்ந்த ராமு மகன் முருகன். இவர்களுக்குள் வீட்டு மனை சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
கடந்த 12ம் தேதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, வெற்றிவேலன், முருகன் வீட்டருகே நிதி வசூலித்து கொண்டிருந்தார். அங்கு வந்த முருகன், அவரது மகன் மணிமாறன் ஆகியோர் வெற்றிவேலனிடம் ஏன் வசூல் செய்கிறாய் என கேட்டு திட்டி, தாக்கினர்.
இதையடுத்து, வெற்றிவேலன் மற்றும் அவர் தரப்பை சேர்ந்த மனோகரன், தங்கவேலு, சின்னராசு, பாஸ்கரன் ஆகியோர் திருப்பி தாக்கினர். இரு தரப்பு புகார்களின் பேரில், வளவனுார் போலீசார் வெற்றிவேலன், முருகன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

