/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு
/
பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு
ADDED : அக் 20, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலத்திற்கு சென்ற பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 53; இவர், கடந்த 16ம் தேதி அப்பகுதியில் உள்ள நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திருமணமான 39 வயது பெண்ணை கிண்டல் செய்துள்ளார். இதனை கண்டித்த அந்த பெண்ணை திட்டி, மிரட்டினார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மோகன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.