sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

/

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்


ADDED : ஆக 10, 2025 11:45 PM

Google News

ADDED : ஆக 10, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ஜலதரமாரியம்மன் கோவில் ஆடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அருகே கண்டமானடி, ஜலதரமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு ஜலதரமாரியம்மன், கங்கையம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

மதியம் 12:00 மணிக்கு ஆழங்கால் கரையில் சக்தி கரகம் ஜோடித்து ஊர்வலம் வந்தது. ஏராளமான பெண்கள் கூழ்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

மதியம் 2:00 மணிக்கு ஜலதரமாரியம்மன், கங்கையம்மன் கோவில்களில், அம்மனுக்கு கூழ் ஊற்றி படையலிட்டனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.

தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மின்னொளியில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 5 நாட்கள் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us