sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல் குவாரிகளில் சி.சி.டி.வி.,: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

/

கல் குவாரிகளில் சி.சி.டி.வி.,: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

கல் குவாரிகளில் சி.சி.டி.வி.,: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

கல் குவாரிகளில் சி.சி.டி.வி.,: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்


ADDED : ஏப் 19, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர், ; அனைத்து கல் குவாரிகளிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என டி.எஸ்.பி., உமாதேவி அறிவுறுத்தினார்.

வானூர் அடுத்த திருவரக்கரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

குவாரிகளில் நடக்கும் தொடர் விபத்துக்களை தடுக்க, டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் கல்குவாரி பாதுகாப்பு குறித்து அதன் உரிமையாளர்களுடன், ஆலோசனைக் கூட்டம் வானூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. வானூர் இன்ஸ்பெக்டர் சிவராஜன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் டி.எஸ்.பி., பேசுகையில்; அனைத்து குவாரிகளிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். குவாரிகளுக்கு உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்குவாரியில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் அளித்திருக்க வேண்டும். குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் போது பாதுகாப்பு அவசியம் என கூறினார். சப்இன்ஸ்பெக்டர்கள் தீபன்ராஜ், நாகராஜன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us