ADDED : ஆக 08, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் பீமநாய்க்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிற்பகல் 2:00 மணியளவில் நடந்த தேரோட்டத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்து, கோவில் நுாற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார். மாலை 6:00 மணியளவில் தொட்டில் செடல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் வசந்தா அன்பரசு, அறங்காவலர் குழு தலைவர் புருேஷாத்தமன், அறங்காவலர்கள் ஸ்ரீதர், ரேணுகா குபேரன், அர்ச்சகர்கள் சந்திரசேகர அய்யர், ஆனந்த் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.