sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆரோவில் வருகை

/

மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆரோவில் வருகை

மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆரோவில் வருகை

மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆரோவில் வருகை


ADDED : ஜூன் 28, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புதுச்சேரி மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள், ஆரோவில் மாத்ரி மந்திரை பார்வையிட்டனர்.

மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலாளர் பனி பிரதராய், சிறப்பு அதிகாரி பிரசாத்குமார் ஆகியோர் நேற்று டில்லியில் இருந்து சர்வதேச நகரமான ஆரோவில் வந்தனர். ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்று, ஆரோவில்லின் வளர்ச்சி திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இருவரும் மாத்ரி மந்திர் பகுதியை பார்வையிட்டனர். மாத்ரி மந்திரின் தியான அறையில் ஆன்மிக அமைதியை நுகர்ந்ததோடு, அதன் உள்நோக்கம் மற்றும் தத்துவம் குறித்து ஆய்வு செய்தனர். மாத்ரிமந்திரின் 12 இதழ்கள், ஆரோவிலின் நோக்கம், அன்னையின் புனித வாக்குகள் மற்றும் நகரின் ஆன்மிக, சமூகப் பணிகள் குறித்த சிறப்பு நுால் மற்றும் தகவல் வெளியீடுகளை ஆரோவில் நிர்வாகிகள் வழங்கினர்.

ஆரோவில் விசிட்டர் சென்டர், ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் வாழ்வியல் போன்ற ஆரோவிலின் கொள்கைகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. உள்ளூர் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இயற்கை உணவு வகைகளின் சுவையை அனுபவித்து, ஆரோவிலின் சுற்றுச்சூழல் நடைமுறைகளையும் நிலைத்தன்மை முயற்சிகளை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us