sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா

/

 அரசு கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா

 அரசு கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா

 அரசு கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா


ADDED : டிச 17, 2025 07:03 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அரசு கலைக் கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா நடந்தது.

மயிலம் ரோட்டில் செயல்பட்டு வரும் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் திறக்க அனுமதிக்கப்பட்டது.

இதையொட்டி சிறுதானிய உணவகம் திறப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

சிறுதானிய உணவகத்தில் மாணவர்களுக்கு மலிவு விலையில் தரமான முற்றும் சத்தான சிறுதானிய உணவுகள் வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், வானுார் பிடிஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட வழங்கல் விற்பனை மேலாளர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us