ADDED : ஆக 06, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம், ஜெயபுரம் ஜெயமுத்து மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா மற்றும் 59ம் ஆண்டு வசந்த உற்சவம் நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும், பூங்கரக ஊர்வலமும், சாகை வார்த்தலும் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, வரும் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு, திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.