sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்

/

வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்

வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்

வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்


ADDED : ஜூன் 01, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.

வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் உள்ள வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 1935ம் ஆண்டு முதல் வர்ணமுத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவமும், அங்காளம்மனுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 90வது ஆண்டாக இக்கோவிலில் மிளகாய் அபிஷேக ஆராதனை மற்றும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் 3 பேருக்கு மிளகாய் அபிஷேகம் நடந்தது.

பால், தயிர், இளநீர், பழங்கள், சந்தானம், மிளகாய் உள்ளிட்ட 108 திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு செடல் உற்சவமும், இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us