ADDED : செப் 12, 2025 04:01 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் நாளை குடிமை பொருள் குறைதீர் முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
பொதுவினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் குறைதீர் முகாம் நடக்கிறது.
இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் வேண்டி கோரிக்கையை வழங்கலாம்.
மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனி கோரிக்கை மனுவும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரும் கோரிக்கை மனுவையும் வழங்கலாம்.
பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள், ரேஷன் கார்டுதாரர்கள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலரிடம் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.