sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மத்திய அரசு இடையூறு செய்தாலும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்; அமைச்சர் பொன்முடி பேச்சு

/

மத்திய அரசு இடையூறு செய்தாலும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்; அமைச்சர் பொன்முடி பேச்சு

மத்திய அரசு இடையூறு செய்தாலும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்; அமைச்சர் பொன்முடி பேச்சு

மத்திய அரசு இடையூறு செய்தாலும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்; அமைச்சர் பொன்முடி பேச்சு


ADDED : மார் 30, 2025 11:22 PM

Google News

ADDED : மார் 30, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், ; தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் வளவனுாரில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

பேரூராட்சி செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி ஜெயச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பொன்முடி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிளை வழங்கி பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி அனைத்து திட்டங்களும் தீட்டி செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள அரசு நிதியை தராமல் தமிழகத்திற்கு என்ன இடையூறு செய்தாலும் அதை தகர்த்தெறிந்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

டில்லியில் மோடி, அமித்ஷாவை காண அ.தி.மு.க., வினர் சென்று வருகின்றனர். இவர்கள் எதற்காக சென்றனர் என்பதை கூறாமலே உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க., தான் முதலில் உள்ளது. இரண்டாவது உள்ள கட்சி கூட்டணியாக பேசி முடிவுக்கு வருவர். இந்த இரு கட்சிகளுக்கு தான் வரும் தேர்தலில் போட்டி' என்றார்.

முன்னதாக, 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' தலைப்பில் நிர்வாகிகள் உறுதிமொழியேற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, பேரூராட்சி நிர்வாகிகள் சரபோஜி, ரகுமான், ராஜன், பழனி, ராஜேந்திரன், விஜயா பெரியசாமி, கந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் அசோக், மன்ற உறுப்பினர்கள் சசிகலா கபிரியேல், மகாலட்சுமி செந்தில், வடிவேல், பாஸ்கரன், பார்த்திபன், பத்மாவதி திரிசங்கு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us