/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ஆலோசனை! கல்லுாரி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுரை
/
100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ஆலோசனை! கல்லுாரி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுரை
100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ஆலோசனை! கல்லுாரி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுரை
100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ஆலோசனை! கல்லுாரி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : ஜூன் 06, 2025 06:49 AM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 100 சதவீதம் அமைந்திடும் வகையில், அனைத்து கல்லுாரி நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வர் அறிவுறுத்தியபடி, விழுப்புரம் மாவட்டத்தில் 'நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி' திட்டத்தின் கீழ், கல்லுாரி கனவு எனும் தொடர் நிகழ்வுகள் விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி, திண்டிவனம் அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் செஞ்சி ரங்கபூபதி கல்லுாரியில், பள்ளி கல்வித்துறையால் நடத்தப்பட்டது. அந்நிகழ்வுகள் மூலம் கண்டறியப்பட்ட 5,458 மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ப்பதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கல்லுாரி கனவு திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக அனைத்து கல்லுாரி முதல்வர்களுடன், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கி பேசிய கலெக்டர், மேற்கண்ட வழிகாட்டி நிகழ்ச்சியில் கண்டறியப்பட்ட மாணவர்களை உயர்கல்வி கற்பதற்கு, கல்லுாரிகளில் இடம் வழங்கப்பட வேண்டும் என கூறி, அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், அந்த மாணவர்களையும் நேரில் கண்டறிந்து, மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் சேர்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பொறியியில், மருத்துவம், சட்டக்கல்லுாரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லுாரிகளில், நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பேசிய கலெக்டர், கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, தற்போது சிறப்புத் தேர்வுகள் நடைபெற இருப்பதால், அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கல்லுாரிகளில் தேவையான சேர்க்கை இடங்களை வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 100 சதவீதம் அமைந்திடும் வகையில், அனைத்து கல்லுாரி நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கூட்டத்தில் திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர் நடராஜன் மற்றும் அனைத்து கல்லுாரி முதல்வர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.