sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு 

/

இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு 

இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு 

இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு 


ADDED : ஏப் 23, 2025 04:09 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மரக்காணம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இருளர் மக்களுக்கான வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மரக்காணம் அடுத்த கட்டளை ஊராட்சியில், பிரதம மந்திரியின் ஜன்மன் திட்டத்தின் கீழ் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'கட்டளை ஊராட்சியில் தலா 5.07 லட்சம் ரூபாய் வீதம், 29 இருளர் மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஜக்காம்பேட்டை, பேரணி, செண்டியம்பாக்கம், செண்டூர், ஆத்துார், பாலப்பட்டு பகுதி இருளர் மக்களுக்காக, வீடுகள் கட்டப்படுகிறது. வீடுகள், அரசு வழிகாட்டுதலின்படி கட்டப்பட வேண்டும். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகள் வசம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

மரக்காணம் பி.டி.ஓ., சிலம்புச்செல்வன், ஸ்ரீதர், உதவி பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us